ஆப்நகரம்

மழையின்றி தவிக்கும் தமிழகம்: நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி தாண்டவமாடுகிறது. வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.

TNN 14 Apr 2017, 9:45 am
சென்னை: தமிழகத்தில் போதிய மழையின்றி வறட்சி தாண்டவமாடுகிறது. வெப்பத்தின் தாக்கமும் அதிகரித்து வருகிறது.
Samayam Tamil heat wave worsens in districts no rain in chennai
மழையின்றி தவிக்கும் தமிழகம்: நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு


கோடைக்காலம் உச்சத்தை தொடும் நிலையில், வெப்பக் காற்றால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை சராசரியை விட, 4 டிகிரி அளவிற்கு அதிகம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் தொடர்ந்து அதிக வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் உருவாகியுள்ள சூழல் நகர்ந்து வெளிப்புறமாக செல்லுமானால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு தொடர்ச்சியாக உயரும் என்று சூறாவளி எச்சரிக்கை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஈரோடு மாவட்டம் தலவாடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் 20மி.மீ மழையும், நீலகிரியில் 10 மி.மீ மழையும் பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கரூர், சேலம், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 34.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 40 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

The heat wave prevailing in interior districts intensified on Thursday with some areas posting a maximum temperature of up to 4° Celsius above normal.

அடுத்த செய்தி