ஆப்நகரம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 21 May 2017, 10:30 am
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil heatwave continues to grip several parts of tamil nadu for next 2 days
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


ஆந்திராவில் நிலவும் தீவிர வெப்ப நிலை காரணமாகவும், வடமேற்கு திசையில் வரும் வெப்பக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்றும், உள்மாவட்டத்தின் ஒருசில இடங்களில் காற்றின் ஈரப்பதத்தை பொறுத்து மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும், பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாகவும், அனல் காற்றின் தாக்கம் வழக்கத்தை விட கூடுதலாகவும் இருக்கும் என்றும், மழைக்கான வாய்ப்பு இலை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடுமையாக வீசும் அனல் காற்றால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tamil Nadu to remain dry and temperature will continue to remain above normal. Dry and sunny weather to prevail across the region with slight increase in day time temperatures.

அடுத்த செய்தி