ஆப்நகரம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை மீண்டும் திவிரம் அடையும் என்பதால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 Aug 2018, 5:16 pm
தென்மேற்கு பருவமழைமீண்டும் திவிரம் அடையும் என்பதால் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain-reuters-L


தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்டமலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24மணி நேரத்தில் கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுள்ளதாவது ‘கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகள், மேட்டூர் அணை மற்றும்கோவை , நீலகிரி, தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அணைக்கு நீர் வரத்து அதிகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும்என்று பதிவிட்டிருந்தார், இதுமட்டுமல்லாமல் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி