ஆப்நகரம்

கனமழையால் நெல்லை அருவிகளில் வெள்ளப்பெருக்கு.!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நெல்லை மாவட்ட அருவிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

TNN 18 Sep 2017, 9:11 pm
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நெல்லை மாவட்ட அருவிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிற
Samayam Tamil heavy floods in tirunelveli waterfalls
கனமழையால் நெல்லை அருவிகளில் வெள்ளப்பெருக்கு.!


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலுள்ள பெரும்பாலான அணைகள் நிரம்ப தொடங்கியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் மற்றும் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால், காரையார், சேர்வலாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியவில்லை என்றாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Heavy floods in tirunelveli waterfalls

அடுத்த செய்தி