ஆப்நகரம்

Chennai Rains: கடலக்கு சென்ற மீனவா்கள் நாளை கரை திரும்ப அறிவுறுத்தல் –ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தளவில் இன்று இரவு மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதா்மேன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 4 Oct 2018, 1:10 pm
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Heavy rain


சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தமிழகத்தின் புதுக்கோட்டை, திருவாரூா், கடலூா், சேலம், நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளா்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் கூறுகையில், மன்னாா் வளைகுடா மற்றும் இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகற 6 முதல் 8ம் தேதி வரை மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள் நாளைக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 தினங்களுக்கு பின்னா் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி