ஆப்நகரம்

இந்த மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Oct 2021, 4:20 pm
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Samayam Tamil tn weather today


அப்போது பேசிய அவர், “தென் மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை ஒட்டி நிலவக் கூடும். இதன் காரணமாக அக்டோபர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் .

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் தென்மேற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் 28, 29, 30 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம். தென்மேற்கு வங்கக்கடல் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சில சமயங்களில் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தமிழக அரசின் தீபாவளி பரிசு: கூட்டுறவுத் துறை அமைச்சர் அறிவிப்பு!
இதனால் மீனவர்கள் 27ஆம் தேதி தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியிலும், 28, 29, 30 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளிலும் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
EXCLUSIVE: சசிகலாவை கட்சியில் இணைக்கலாம்: அதிமுக மாஜி அமைச்சர்!
அடுத்த இரு தினங்களுக்கு நெல்லை, குமரி, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி