ஆப்நகரம்

Chennai Weather: 5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை - வானிலை எச்சரிக்கை!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 12 Dec 2019, 12:56 pm
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
Samayam Tamil Rains2


இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீண்டும் வெளுக்கப் போகும் கனமழை - இந்தப் பகுதி மக்கள் எல்லாம் உஷாரா இருங்க!

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை பதிவான மழையின் நிலவரத்தை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 40 செ.மீ.க்கு 43 செ.மீ மழை கிடைத்துள்ளது.

ஐயமாகி போன மய்யம் - கமலை வறுத்தெடுத்த "நமது அம்மா"

இது இயல்பை விட 6% அதிகம் ஆகும். சென்னையை பொறுத்தவரை 68 செ.மீ.க்கு 58 செ.மீ. மழை பெய்துள்ளது. இது 14% குறைவு. புதுவையில் 77 செ.மீ.க்கு 54 செ.மீ மட்டுமே பெய்திருக்கிறது.

இது 30% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டத்தில் 33 செ.மீ.க்கு 25 செ.மீ தான் பெய்துள்ளது. இது இயல்பை விட 25% குறைவாகும் எனத் தெரிவித்தார்.

கருணாஸ் எடுத்த அதிரடி முடிவு - அனல்பறக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்!

அடுத்த செய்தி