ஆப்நகரம்

இன்றும் தமிழகத்தில் கனமழை தொடரும்...!

தமிழகத்தில் பல பகுதிகளில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN & Agencies 31 Oct 2017, 7:50 am
சென்னை: தமிழகத்தில் பல பகுதிகளில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil heavy rain continues in chennai says chennai meteorological department
இன்றும் தமிழகத்தில் கனமழை தொடரும்...!


தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்’ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும். '' என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உட்பட 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி