ஆப்நகரம்

மெரீனாவில் பலத்த காற்று, சென்னையில் தொடர் மழை

சென்னையில் தொடர்ந்து மழை பொழிவு உள்ளதால், மெரீனா உள்ளிட்ட கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

Samayam Tamil 21 Nov 2018, 9:52 pm
சென்னையில் நேற்று முதலே மழை பெய்து வரும் நிலையில், நகரத்தை ஒட்டியுள்ள மெரீனா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் கடலில் சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது.
Samayam Tamil 90b1b125-74f0-4418-9253-f237fd41c067.


’கஜா’ புயல் கரையை கடந்த நிலையில், தமிழகத்தின் டெல்டா மாவட்ட பகுதிகள் பெரும்பாலும் புயலின் தாக்கத்தால் உருகுலைந்து போயுள்ளன. அதை தொடர்ந்து சென்னையில் நேற்று முதலே கனமழை பெய்து வந்தது.

சென்னை ராயப்பேட்டை, வடபழனி, சேப்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையும், சாரல் மழையும் மாறிமாறிப் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.


மேலும், சென்னையின் கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுவதும், கடல் சீற்றமும் காணப்படுகிறது. தவிர, மணிக்கு 40 முதல் 45 வரை கி.மீ வேகத்தில் காற்று வீசி வருவதால் கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிக்கு செல்ல பொதுமக்கள் யாருக்கும் அனுமதிக்க இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடவே, கலங்கரை விளக்கத்தின் மீது கண்காணிப்புக்காக நிறுவப்பட்டுள்ள சுழலும் ராட்சத ரேடார் கருவியின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்த நிலையில் கடல் சீற்றமும் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி