தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அயனவாக்கம், வானகரம், மதுரவாயல், பூந்தமல்லி, பொன்னேரி, மீனம்பாக்கம், எண்ணூர், அம்பத்தூர், சிட்லப்பாக்கம், பெருங்குளத்தூர், குன்றத்தூர், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்தணி, அரக்கோணம், பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
எண்ணூரில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அயனவாக்கம், வானகரம், மதுரவாயல், பூந்தமல்லி, பொன்னேரி, மீனம்பாக்கம், எண்ணூர், அம்பத்தூர், சிட்லப்பாக்கம், பெருங்குளத்தூர், குன்றத்தூர், முகலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், திருத்தணி, அரக்கோணம், பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
எண்ணூரில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் 6 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.