ஆப்நகரம்

ஆந்திராவில் இருந்து புல்லூர் அணை நிரம்பி பாலாற்றுக்கு வந்த நீர்!!

ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு மிஞ்சிய நீர் அம்பலுர் வழியாக பாலாற்றில் வந்து கலந்தது.

TNN 1 Aug 2017, 4:18 pm
ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு மிஞ்சிய நீர் அம்பலுர் வழியாக பாலாற்றில் வந்து கலந்தது.
Samayam Tamil heavy rain in andhra due to that water comes to palar river
ஆந்திராவில் இருந்து புல்லூர் அணை நிரம்பி பாலாற்றுக்கு வந்த நீர்!!


ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டியதால் தமிழகத்திற்கு வரும் நீர் தடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தின் எல்லை பகுதியான வாணியம்பாடிக்கு அருகே உள்ள புல்லூரில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் உயரத்தை 5 அடியிலிருந்து 15 அடி அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர அரசு வலியுறுத்தி வந்தது. இதை தமிழக அரசு எதிர்த்தாலும் ஆந்திர அரசு தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை . இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் நீர் இல்லாத நிலை ஏற்பட்டது.

நீர் இல்லாததால் அந்தப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவால் வாணியம்பாடி அருகே பள்ளத்தூரை சேர்ந்த விவசாயி சீனு புல்லூர் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஆந்திரா மாநில வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீர் அனைத்தும் புல்லூர் தடுப்பணைக்கு வந்ததால் அணை நிரம்பி தமிழக பகுதிகளுக்குள் தண்ணீர் வந்தது.

அடுத்த செய்தி