ஆப்நகரம்

சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை – மக்கள் மகிழ்ச்சி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Samayam Tamil 23 Dec 2018, 2:21 am
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Samayam Tamil rain 1


இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நிலவும் நிலையில் செய்தியாளா்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநா் கூறுகையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறினாா்.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தொிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்தது.

டிசம்பா் மாதம் வரை பெய்ய வேண்டிய பருவமழை சென்னையில் 40 சதவீதம் அளவிற்கு குறைவாக பெய்துள்ளதாகவும், இதனால் சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இரவில் பெய்த மழையால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

அடுத்த செய்தி