ஆப்நகரம்

நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை: வேறு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாட்டில் நேற்று பரவலாக பல இடங்களில் மழை பெய்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 4 Jul 2020, 8:37 am
கொரோனா ஒரு பக்கம் என்றால் கோடை வெயில் ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்துவந்தது. இந்நிலையில் நேற்று மாலை, இரவு நேரங்களில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது.
Samayam Tamil heavy rain in chennai


சென்னையில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு நேரத்தில் கிண்டி, எழும்பூர், பாரிமுனை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது.

நாமக்கல் மாவடத்தில் பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு நேரத்தில் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான எருமைப்பட்டி, காரவள்ளி, சேந்தமங்களம் உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரம் மழை பெய்தது.

‘இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, குருவி மலை, பூக்கடை சத்திரம், பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருத்துறைப் பூண்டி, கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சை, நாகை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்துள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா? காவல் நிலையத்தில் நடந்த பேரம்!

சீர்காழியில் பெய்த மழையால் பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் 3ஆவது நாளாக மழை பெய்தது. சேலம், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை நேற்று வெளுத்து வாங்கியது.

இந்நிலையில் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி