ஆப்நகரம்

ஈரோட்டில் சும்மா வெளுத்து வாங்கிய மழை: குஷியில் விவசாயிகள்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 9 May 2019, 9:26 am
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் இடியுடன் கூடிய பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil Heavy Rain


தமிழகமெங்கும் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. சுமார் இரண்டு மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது.

மழை பெய்ததால் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி