ஆப்நகரம்

சேலம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பச்சப்படி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது .

TNN 15 Oct 2017, 11:43 am
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பச்சப்படி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது . சாலையில் வெள்ள நீர் பெருக்கெடித்து ஓடுவதாலும் , வீடுகளுலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளகியுள்ளனர்.
Samayam Tamil heavy rain in salem
சேலம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை!


சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, மாநகரில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை பெய்த கன மழையினால், சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள குமரகிரி ஏரி முழுவதும் நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

இதன் காரணமாக பச்சப்படி , அசோக் நகர், சத்யா நகர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த குளிர்சாதன பெட்டிகள், பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நீரில் மிதந்தன.

heavy rain in salem

அடுத்த செய்தி