ஆப்நகரம்

நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Samayam Tamil 1 Dec 2018, 10:45 am
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
Samayam Tamil 46381979
நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு!


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

மற்ற அணைகளின் நீர்மட்டம் வருமாறு:

கடனாநதி - 78.20, ராமநதி - 69.25, கருப்பாநதி - 67.86, குண்டாறு - 36.10, வடக்கு பச்சையாறு - 31.50, நம்பியாறு - 19.61, கொடுமுடியாறு - 37, அடவிநயினார் - 94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மி.மீ மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மி.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 38.2 மி.மீ மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மி.மீ மழையும், கடம்பூர் மற்றும் எட்டயபுரத்தில் தலா 3 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி