ஆப்நகரம்

தண்ணீர் பிரச்னையால் தவித்த மக்களை குளிர்விக்க வந்த மழை!

வெயிலால் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்ட தமிழக மக்களுக்கு பரிசாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

TNN 3 Mar 2017, 3:27 pm
மதுரை : வெயிலால் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்ட தமிழக மக்களுக்கு பரிசாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
Samayam Tamil heavy rain in south tamil nadu
தண்ணீர் பிரச்னையால் தவித்த மக்களை குளிர்விக்க வந்த மழை!

கடந்த சில வருடங்களாக தென் மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் ஏமாற்றியதால், நிலத்தடி நீர் குறைந்தது, இதனால் குடிநீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு மட்டும் பருவமழை 65% அளவு குறைவாக தமிழகத்தில் மழை பெய்துள்ளது. இதன் காரணமகா தமிழகத்தின் பல்வேறு நீர் நிலையங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு குடம் குடிநீர் சிலர் 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். தண்ணீர் லாரியை கண்டால் ஓடிப்போய் தண்ணீ பிடிக்க வரிசையில் நிற்கும் அவலமும், கி.மீ கணக்கில் நடந்து சென்று தண்ணீ எடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் டிசம்பர் 3ம் தேதி மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதை தொடர்ந்து இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இராமநாதபுரத்தில் கமுதி, முதுகுளத்தூர், போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதே போல் மதுரையின் பல பகுதிகளிலும், வேதாரண்யத்திலும் மழை பெய்துள்ளது.

அடுத்த செய்தி