ஆப்நகரம்

அடிச்சு நொறுக்கிய மழை: மகிழ்ச்சியில் நனைந்த மக்கள்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Samayam Tamil 24 Jul 2020, 8:50 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவ மழை காரணமாக 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
Samayam Tamil tamil nadu rains


அதன்படி தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அங்கு நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சி பரவியது.

இதேபோல் திருப்பூர் மாநகர் பகுதிகளான தெற்கு தோட்டம், போயம்பாளையம், சங்கிலி பள்ளம், ஜமனைப் பள்ளம் ஆகிய பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இன்னைக்கு இ-பாஸ் வாங்கிட்டு ரெண்டு நாள் முன்னாடியே கேளம்பாக்கம் போன ரஜினி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. கயத்தார், இனாம் மணியாச்சி, திட்டங்குளம், இளையரசனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சிறப்பு ரயில்களும் நிறுத்தப்படுமா? ரயில்வே வாரியத் தலைவர் சொல்வது இதுதான்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் உருவாகியது. தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு ஊர்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி