ஆப்நகரம்

தொடர் மழையால் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை !

தூத்துகுடி மாவட்டத்தில், இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 25 Oct 2018, 10:43 am
தூத்துகுடி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னையிலிருந்துதூத்துகுடி செல்லவிருந்த2 விமானங்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil ChennaiRainsarticle


இந்நிலையில் மழை காரணமாக இன்று ஒரு நாள்மட்டும் மாவட்டத்தில் உள்ள எல்லா பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் தக்கலை, திங்கள்நகர், குலசேகரம்போன்ற பகுதிகளிலும் விடிய விடியமழை பெய்ததால் அப்பகுதிகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மலையோர பகுதிகளில் தொடர்மழை காரணமாக பேச்சிப்பாறை, பெரிஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளுக்கு நீவரத்து அதிகரித்துள்ளது.

கேதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் திற்பரப்பு அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 5வது நாளாகசுற்றுலா பணிகளுக்கு திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி