ஆப்நகரம்

சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பரவலாக மழை!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஆகிய 18 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Samayam Tamil 24 Aug 2019, 8:25 am
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பரவலாக மழை!
சென்னை, காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பரவலாக மழை!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் கோடம்பாக்கம் ஆயிரம்விளக்கு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவுக்குப் பிறகு நல்ல மழை பெய்தது.

காஞ்சிபுரத்தில், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், ஓரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

பாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கும் சோகம்; நீங்காத சாதியம்- ஒதுக்கப்படும் தலித்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 5வது நாளாக, வல்லாபுரம், வாலிகண்டபுரம், கீழப்புலியூர், குன்னம், வரகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கனமழை பெய்தது. சேலம் சூரமங்கலம், 3 ரோடு, குரங்குசாவடி, புதிய பேருந்து நிலையம் பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது .

இதேபோல், திருவண்ணாமலை, கும்பகோணம், கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று நல்லமழை பெய்தது.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல்! தீவிர கண்காணிப்பில் போலீசார்!!

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக் கடலில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்மேற்குப் பருவக் காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது: நிர்மலா சீதாராமன்

தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு வங்கக் கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி