ஆப்நகரம்

காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்- சர்ரென்று உயர்ந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணை நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

Samayam Tamil 9 Aug 2019, 10:56 am
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
Samayam Tamil Mettur Dam


இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Also Read: 100 ஆண்டுகளில் இல்லாத பெருமழை; ஆச்சரியப்பட வைத்த அவலாஞ்சி- அதிர்ச்சியில் நீலகிரி!

இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியில் பாயும் வெள்ள நீரால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கலுக்கு தற்போது வினாடிக்கு 5,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,097 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Also Read: கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் வினாடிக்கு 5,016 கன அடி நீர் வந்தது.

அப்போது அணை நீர்மட்டம் 53.47 அடியாக இருந்தது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 53.98 அடியாக அதிகரித்துள்ளது.

Also Read: காத்திருக்கும் சென்னை மக்களுக்கு கொட்டப் போகிறது மழை, அதுவும் இப்பவே...!!

அடுத்த செய்தி