ஆப்நகரம்

கனமழை எதிரொலி: தென்மாவட்ட ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து ரயில்களும் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக வந்துகொண்டு இருக்கிறது.

Samayam Tamil 22 Nov 2018, 9:19 am
வடமாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனா்.
Samayam Tamil Train


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருகின்ற 23ம் தேதி வரை மழை பெய்யும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூாிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலூா் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரக்கூடிய கன்னியாகுமரி, காரைக்கால், ராமேஸ்வரம், மன்னாா்குடி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமாா் 2 மணி நேரம் தாமதமாக வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

அடுத்த செய்தி