ஆப்நகரம்

நாளைக்கும் மிக கனமழை: எந்தெந்தப் பகுதிகளுக்கு தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும் பகுதிகளில் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Dec 2019, 2:17 pm
தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும், மூன்று இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குன்னூரில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil நாளைக்கும் மிக கனமழை


தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை காண வாய்ப்புள்ளது. நீலகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

Chennai Rains: இத்தனை மாவட்டங்களில் இன்று புரட்டி எடுக்கும் மிகக் கனமழை - வானிலை எச்சரிக்கை!

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத் தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர்1ஆம் தேதி முதல் இன்று வரை 40 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது 11 சதவீதம் அதிகமாகும்.

கொட்டித் தீர்த்த பெரு மழை- தென் தமிழகத்தில் நிரம்பி வழியும் நீர்நிலைகள்!

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி