ஆப்நகரம்

உருவாகிறது புயல்; வெளுத்துக் கட்டப் போகும் கனமழை - எங்கு, எப்போது? வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் விரைவில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2019, 5:05 pm
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. கோடைகாலம் என்றாலே குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடும். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் தவித்து வருகின்றனர்.
Samayam Tamil TN Storm


இதற்கிடையில் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இது வெப்பத்தை தணித்து, குடிநீர் பிரச்சனையை ஓரளவு தீர்த்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.

இது வரும் 26ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புண்டு. இதன் காரணமாக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

எனவே மீனவர்கள் வரும் 26ஆம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம். இதையடுத்து 28ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி