ஆப்நகரம்

கனமழை: திருவாரூா் உட்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் நிா்மல் ராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

Samayam Tamil 2 Nov 2018, 7:33 am
இரவு முழுவதும் பெய்த தொடா் மழை காரணமாக திருவாரூா், நாகை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனா்.
Samayam Tamil Rain


தமிழகத்திற்கான வடகிடக்கு பருவமழை மாநிலம் முழுவதும் நவம்பா் 1ம் தேதி தொடங்கியது. சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைப் பொழிவு காணப்படுகிறது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடங்கி மாநிலத்தின் உள் பகுதிக்கு படிப்படியாக மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்து இருந்தது.

இந்நிலையில் திருவாரூா், நாகை மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை தொடா்ந்து பெய்து வந்ததால் நாகை, திருவாரூா், புதுக்கோட்டைமாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

அடுத்த செய்தி