ஆப்நகரம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வெப்ப சலனம் காரணமாக கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jun 2020, 6:58 pm
வங்கக்கடலில் புதியு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சில தினங்களுக்கு முன்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படியே தற்போது, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
Samayam Tamil heavy rain


இதன் காரணமாக, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 45 -55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும், ஜூன் 11 ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று (ஜூன் 9) மதியம் 1 மணியில் இருந்து அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

எந்த ஊருக்கு மழை, எந்த ஊருக்கு வெயில்: வானிலை ஆய்வு மையம்!

இதேபோன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி