ஆப்நகரம்

ஐந்து மாவட்டங்களில் வெளுத்து வாங்கவுள்ள மழை!

தஞ்சை ,திருவாரூர், நாகை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Samayam Tamil 25 Sep 2020, 6:19 pm
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதான மழையும் பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain


அதேசமயம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியே பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை உங்க ஏரியாவுல எப்படியிருக்க போகுது தெரியுமா?

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், விழுப்புரம் மாவட்டம் நெமூர், செஞ்சி, நீலகிரி மாவட்டம் கல்லட்டி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஆகிய இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகயுள்ளது.

அடுத்த செய்தி