ஆப்நகரம்

Chennai Rains: இரண்டு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த இரு தினங்களுக்கான மழை பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 17 Nov 2020, 2:52 pm
குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil rain update


புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்தமாக தூத்துக்குடி 17, பாபநாசம் (திருநெல்வேலி ) 14,வந்தவாசி (திருவண்ணாமலை ) 11, திருபுவனம் (சிவகங்கை)10, மதுராந்தகம்(செங்கல்பட்டு), மைலாடி (கன்னியாகுமாரி) தலா 9, கொட்டாரம் (கன்னியாகுமாரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 8, பாளையங்கோட்டை, ராஜபாளையம் (விருதுநகர்), கோவில்பட்டி (தூத்துக்குடி ) தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இன்று (நவம்பர் 17 )குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பாஜகவில் இணைவாரா மு.க.அழகிரி? அவர் சொல்வது இதுதான்!

நாளை (நவம்பர் 18 ) மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி