ஆப்நகரம்

கோவை மக்களை குளிர வைக்கும் திடீர் கனமழை..!

கோடை காலம் ஆரம்பித்திருக்கும் நிலையில் கோவையில் மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் சற்று விடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 21 Mar 2020, 9:02 pm
தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியதில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் வெயில் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கி வருகிறது.
Samayam Tamil கோவை மக்களை குளிர வைக்கும் திடீர் கனமழை


இதனால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். அது போதாதென்று கொரோனா மக்களை நடமாடவிடாமல் பீதியை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே கோவையில் மழை வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்ட நிலையில் இன்று திடீரென மழை பெய்யத்துவங்கியது. இதனால் கோவை மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நாளை மின்சார ரயில் சேவைகள் ரத்து...! ஆனாலும் ஒரு வாய்ப்பு...

சென்னையில் கோடை காலம் என்றாலும் இதுபோன்ற திடீர் மழை வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாகவே சுட்டெரிக்கும் வெயிலினால் மாலை நேரங்களில் சென்னை வாசிகள் வெளியில் சென்று வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். கோவையில் அடித்த மழை இங்கும் ஒரு காட்டு காட்டாதா என்பது சென்னை வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த செய்தி