ஆப்நகரம்

வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

வடதமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 7 Jun 2018, 3:24 pm
வடதமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
Samayam Tamil Rain


தென்மேற்கு பருவமழை காலத்தில் தென்மேற்கு திசையில் வீசும் காற்று வலுவடைந்திருப்பதால் மழை பெய்து வருகிறது. இது தொடா்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ காற்று வலுவாக வீசுகிறது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதோடு, கிழக்கு திரை காற்றும் மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி தெற்கு ஆந்திரா பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக வேலூாில் 9 செ.மீ. மழையும், கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் அடுத்துவரும் 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுவையின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி