ஆப்நகரம்

Chennai Rains: வடதமிழக மாவட்டங்களில் தீவிர கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் டெல்டா பகுதிகள் மற்றும் வடதமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னையில் அதிகாலை 8.30 மணி வரை 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Samayam Tamil 21 Nov 2018, 5:47 pm
புதுச்சேரி உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், சென்னையில் இன்று காலை 8.30 மணி வரை 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Samayam Tamil 24898e7b-6487-46dd-aaf4-d8a2bcd541d3.
தமிழகத்தில் மிக கனமழை- வானிலை அமையம்


தமிழகத்தின் டெல்டா பகுதிகள் மற்றும் வடதமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னையில் அதிகாலை 8.30 மணி வரை 22 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் தொிவித்துள்ளாா்.


மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடா்ந்து அதே இடத்தில் நீடிப்பதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.


அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவித்த இயக்குநர் பாலசந்திரன், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்றும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் பெய்து வரும் மழை மேலும் தொடரும் எனவும் தெரிவித்தார்.


வடமாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். தெற்கு ஆந்திரா, மன்னாா் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம். கஜா 2, கஜா 3 போன்ற வதந்திகளை நம்பவேண்டாம். அவற்றுக்கு வாய்ப்பில்லை” என செய்தியாளர் சந்திப்பில் பாலசந்திரன் கூறினார்.

இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தொடர்ந்து சென்னையில் மழை நீடிக்கும் எனவும், இன்று காலை 8.30 மணி வரை நகரத்தில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி