ஆப்நகரம்

இறங்கி அடிக்கப் போகும் மிக கன மழை- தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒரு அலர்ட்!

தென்னிந்திய மாநிலங்களில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலை இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Aug 2019, 7:04 pm
தென்மேற்கு பருவ மழை காரணமாக, தென்னிந்திய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வந்தது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழையால், தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்தது.
Samayam Tamil Rain


இதன் காரணமாக மேட்டூர் அணை கிடுகிடுவென உயர்ந்தது. பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையின் நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் வீராணம் ஏரிக்கும் தண்ணீர் வந்து சேர்ந்தது.

ஆட்சியில் இருக்கும் வரைதான்; அப்புறம் பாருங்க என்ன ஆகுதுன்னு... தினகரன் சவால்!!

அதேசமயம் வட மாநிலங்களில் பெய்த மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மழையின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கக் கடலின் வடக்கே அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

மோடி, அமித் ஷாவை இப்படி பேசலாமா? போலீஸ் கையில் வசமாக சிக்கிய தமுமுக பிரமுகர்!

இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகரக்கூடும். இதையொட்டி அடுத்த சில நாட்களுக்கு தென்னிந்திய மாநிலங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்புண்டு.

தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யக் கூடும். குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருத்நகர், மதுரை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

தான் திருடி பிறரை நம்பாது: ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி!!

கோவை, தேனி, நீலகிரி மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் பரவலாக இன்று மழை பெய்துள்ளது.

அடுத்த செய்தி