ஆப்நகரம்

காட்டுக்குள் தப்பு செஞ்சா தலைக்கு மேல் ஆபத்து- சேலம் வனச்சரகத்தில் இப்படியொரு ஏற்பாடு!

வனக்குற்றங்களை தடுக்கவும், விலங்குகள் நடமாட்டத்தை அறியவும் புதிய நடவடிக்கையை தமிழக வனத்துறை எடுத்துள்ளது.

Samayam Tamil 6 Mar 2020, 4:32 pm
காடுகள் - இந்த உலகை உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் பொக்கிஷங்கள். அதை எந்தளவிற்கு நாசப்படுத்துகிறோமோ, அந்தளவிற்கு மோசமான முடிவுகள் மனிதர்களுக்கு ஏற்படும். இவற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக வனத்துறையும் அதிநவீன யுக்திகளை கையாண்டு குற்றங்களைத் தடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
Samayam Tamil Forest


இந்நிலையில் சேலம் சேர்வராயன் மலைத்தொடர், ஈரோடு சத்தியமங்கலம், திருநெல்வேலி முண்டந்துறை, மதுரை, உதகை, கொடைக்கானல் ஆகிய வனப் பகுதிகளை கண்காணிக்க புதிய முறைகளை வனத்துறை கையில் எடுத்துள்ளது.

அதன்படி வன ஊழியர்கள் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் காட்டுத் தீ பரவாமல் தடுத்தல், விலங்குகள் வேட்டையாடுதலை தடுத்தல், சந்தன மரம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்துதலை தடுக்கும் பணியில் ஈடுபடுவர்.

இவர்களுக்கு வசதியாக பல ஆண்டுகளாக தொலைநோக்கியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்காணிப்பு பணிக்கு ஹெலிகேம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக வைகை அணை வனப்பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஹெலிகேம் பெறப்பட்டது.

பிராய்லர் கோழி, முட்டை சாப்பிடலாமா; எதும் கொரோனா வருமா? - அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

இதனை சேலம் வனச்சரகத்தில் உள்ள அதிகாரிகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வாழப்பாடி வனச்சரகத்தில் பணியாற்றும் 5 வன ஊழியர்களை தேர்வு செய்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் கோதுமலை, வெள்ளாளகுண்டம் மலை, திருமனூர் ஜம்பூத்துமலை, கிடமலை, நெய்யமலை, அருநூற்றுமலை, பெலாப்பாடி மலை, புங்கமடுவு, புளுதிகுட்டை ஆகிய வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

ஹெலிகேம்கள் மூலம் வன விலங்குகள் நடமாட்டம், வனக்குற்ற தடுப்பு கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். இவற்றின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை ஆய்வு செய்ய தனியாக குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வன ஊழியர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி