மதுரையில் இன்று முதல் ஹெட்மெட் கட்டாயம் என போலீஸ் கமிசனர் அதிரடி உத்தவிட்டதால், காலை முதல் சுமார் 150க்கு மேல் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இன்று (ஏப்ரல் 1) முதல் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார் காவல்துறை ஆணையர் சைலேஷ்குமார் யாதவ்.
இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் மதுரை முழுவதும் பல்வேறு இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெட்மெட் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்தனர்.
மதுரை மற்றும் சுற்றுப் புறப்பகுதிகளான 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டத்தில் காலை முதல் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அவர்களிடம் ரூபாய் 100 அபராதமாக பெறப்பட்டது. இதனால் மதுரையில் ஹெல்மெட் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.