ஆப்நகரம்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்... இனி நைட் 10 மணிவரை பெட்ரோல் போடலாம்!!

பெட்ரோல் பங்க்குகள் இயங்கும் நேரத்தை இரண்டு மணிநேரம் நீட்டிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இனி இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Sep 2020, 5:49 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, பெட்ரோல் பங்க்குகள் காலை 8 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன.
Samayam Tamil petrol bunk


அதன்பின், ஜூன் 1 ஆம் தேதி முதல் பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது (unlock 1.0) மாதந்தோறும் பெட்ரோல் பங்க்குகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டது.

இறுதியாக, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி தமிழக அரசு நான்காம்கட்ட பொதுமுடக்கத்தை அறிவித்தது. அதில் பங்க்குகள் செயல்படும் நேரம் இரவு எட்டு மணி வரை நீட்டிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது, கூடுதலாக இரண்டு மணி நேரம் இயங்க தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

பெட்ரோல் விலை: அடி சக்கை, அதிரடி விலை குறைப்பு!

இதனையடுத்து, தமிழகத்தில் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்கும். பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி