ஆப்நகரம்

ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

ஹெராயின் கடத்தில் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Samayam Tamil 26 Jan 2019, 3:44 am
சென்னை: ஹெராயின் கடத்தில் வழக்கில் இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Samayam Tamil Heroin smuggling


தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஹெராயினை கடந்த அக்டோபர் 2012ல் போதைப் பொருள் கடத்தல் பிரிவினர் கைப்பற்றினர். இதில் வேளாங்கண்ணியைச் சேர்ந்த சிவனேசன் மற்றும் மும்பையைச் சேர்ந்த பஹீம் என்பவரையும் அவர்கள் கைது செய்தனர்.

கடந்த 2012ல் மும்பையில் இருந்து சென்னை வந்த ரயிலில் இவர்களிடமிருந்து சுமார் 4.08 கி.கி., ஹெராயினை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றினர். இதையடுத்து இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பிரிவு 8(சி), பிரிவு 21 (சி), மற்றும் பிரிவு 29ன் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
இதற்கிடையில் சிவனேசன் தங்கியிருந்த இடத்தையும் சோதனை செய்த போலீசார் அங்கிருந்தும் சுமார் 2 கி.கி., ஹெராயினை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதி கே. ஐயப்பன், இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

அடுத்த செய்தி