ஆப்நகரம்

அதிமுக பொதுக்குழு: நள்ளிரவில் நடந்த ட்விஸ்ட் - ஓபிஎஸ் கை ஓங்கியது!

அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 6:34 am
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் நேற்று இரவே மேல் முறையீடு செய்யப்ப்பட்டது.
Samayam Tamil ops eps


நீதிபதி துரைசாமி , சுந்தர் மோகன் அமர்வில் நள்ளிரவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இரவில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள், கூட்டம் நடத்தலாம். 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்க கூடாது என கூறினர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு, முடிவெடுக்கலாம் ஆனால் அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
aiadmk general body meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம்... ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
ஆனால் நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கையை நிராகரித்தனர்.

எனவே இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். ஒற்றைத் தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.

எனவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
EXCLUSIVE: எடப்பாடி ஜெயித்தது எப்படி? ஓபிஎஸ் சறுக்கியது எங்கே? ராஜன் செல்லப்பா பேட்டி!
முன்னதாக நேற்று பிற்பகல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இரவு 8:30 மணியளவில் உத்தரவு பிறப்பித்தார். அதில் ‘அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நாளை (இன்று) திட்டமிட்டபடி நடத்தலாம்; தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை. பொதுக்குழுவுக்கு தடை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி