ஆப்நகரம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2022, 4:17 pm
அரியலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனி நபர்கள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Madras high court


அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள அய்யன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் காந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அய்யன் சுத்தமல்லியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆதி திராவிடர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்திற்காக 24 மனைகள் பிரிக்கப்பட்டதாகவும், அவற்றில் 4 மனைகளை பன்னீர்செல்வம் மற்றும் லோகநாதன் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வீடுகளும், விவசாய நிலங்களும் வைத்திருக்கக்கூடிய இருவரும் ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கிய இடங்களை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாவட்ட நிர்வாகத்திடமும், ஆதி திராவிடர் நலத்துறையிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் .
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்: இது சரியான முடிவா?
ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த நான்கு மனைகளையும் மீட்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு நடத்தும் ஆலோசனை: காரணம் இதுதான்!
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அடுத்த செய்தி