ஆப்நகரம்

'தர்பார்' ரிலீசுக்கு ஹைகோர்ட் வைத்துள்ள 'செக்' !!

தர்பார் திரைப்படம் நாளை மறுநாள் (ஜனவரி 9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு , ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Jan 2020, 9:19 pm
ரஜினியின் 'தர்பார்' திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து இன்று ( செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil தர்பார் ரிலீசுக்கு ஹைகோர்ட் வைத்துள்ள செக் !!


"லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் வரும் 9 ஆம் தேதி (ஜனவரி 9) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இத்திரைப்படத்தை வெளியிட தடைக் கோரி, மலேசியாவைச் சேர்ந்த திரைப்பட வினியோக நிறுவனமான DMY Creations சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.

Darbar ரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவப் போகும் ரசிகாஸ்?

அதில், "படத்தயாரிப்புக்காக ரூ.12 கோடியை லைக்கா நிறுவனம் வட்டிக்கு பெற்றிருந்தது. அந்தத் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 23.70 கோடியாகியுள்ளது. அத்தொகையை தற்போது தர தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் அல்லது தர்பார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் " என கோரப்பட்டிருந்தது.

யார்கிட்ட, முடியுமா?: தமிழ் ராக்கர்ஸுக்கு சவால் விடும் ரஜினி 'தர்பார்' ரசிகர்கள்

இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "லைக்கா நிறுவனம் ரூ. 4.90 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அல்லது இத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்யும் வரை, "தர்பார்" திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த செய்தி