ஆப்நகரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 51 கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 51 கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 12 Jul 2018, 6:21 pm
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 51 கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil 1meenakshi-31-1472643776
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடைகளை திறக்க அனுமதி


கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி உலகப்புகழ் பெற்ற உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜநாகுலு என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சாமி சன்னதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே கடைகளை நடத்திக்கொள்ள உரிமையாளர்கள் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும் எனவும், வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள் அதற்குரிய பணத்தை கோயில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி