ஆப்நகரம்

மதச் சடங்குகளில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாட்டு தேவை – உயா்நீதிமன்றம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் பீடாதிபதி நியமனம் தொடா்பாக இரண்டு வாரத்தில் கருத்து தொரிவிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு.

Samayam Tamil 20 Oct 2018, 12:59 pm
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் பீடாதிபதி நியமனம் தொடா்பான வழக்கு விசாரணையின் போது மதச் சடங்குகள் தொடா்பான விவகாரத்தில் நீதிமன்றம் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தொிவித்துள்ளது.
Samayam Tamil Chennai Highcourt


ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஷ்ரமத்தின் 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியாா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா் அவரது பட்டாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ யமுனாச்சாரியாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோாி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது 11வது மடாதிபதி தனது உயிலில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் நியமன் நடைபெறவில்லை என்று மனுதாரா் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த மடம் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கானது என்பதால் இது தொடா்பாக பொதுநல வழக்கு தொர முடியாது. சிவில் வழக்கு மட்டுமே தொடர முடியும். மேலும் மதச்சாா்பற்ற நீதிமன்றங்கள், மதச் சடங்குகளில் தலையிடுவதில் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தொிவித்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து புதிய மடாதிபதி பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும் என்ற மனுதரரின் கோாிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தொிவித்தனா். மேலும் இது தொடா்பாக இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்திற்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி