ஆப்நகரம்

ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சசிகலா நடராஜன்!

அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா நடராஜன் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.

TOI Contributor 29 Dec 2016, 12:21 pm
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு சசிகலா நடராஜன் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.
Samayam Tamil high drama in poes garden sasikala natarajan pays tribute to jayalalaithaa
ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சசிகலா நடராஜன்!


சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா நடராஜனை, அடுத்த பொதுச் செயலாளராக தேர்வு செய்வதாகக் கூறி, ஒருமனதாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான தீர்மான நகலை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக மூத்த தலைவர்கள், போயஸ் தோட்டம் சென்று, சசிகலா நடராஜனிடம் நேரில் வழங்கினர்.

இதன்பின்னர் வெளியே வந்த சசிகலா நடராஜன் அங்கிருந்த திரளான கட்சியினருக்கு வணக்கம் தெரிவித்தார். போயஸ் கார்டன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்தை வணங்கி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த சசிகலா நடராஜன், தனது பதவியை உணர்ந்து, பொறுப்போடு செயல்படுவேன் என உறுதியேற்றுக் கொண்டார்.

இந்த சம்பவம் அங்கிருந்த அதிமுக கட்சித் தொண்டர்கள், தலைவர்களை சோகத்தில் ஆழ்த்துவதாக இருந்தது.

High drama in Poes Garden; Sasikala Natarajan Pays tribute to Jayalalaithaa.

அடுத்த செய்தி