ஆப்நகரம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

அரக்கோணம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியுள்ளார்.

Samayam Tamil 25 Dec 2018, 10:16 am
அரக்கோணம் அருகே இயங்கிவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியுள்ளார்.
Samayam Tamil Arakkonam


வேலூர் மாவட்டம்,அரக்கோணம் அடுத்த காவனூர் பகுதியில் உள்ள விவேகனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்12ம் வகுப்பு பொருளாதார பாடப்பிரிவு ஆசிரியராகமுதுகலை பட்டதாரி வெங்கடேசன் பணியாற்றி வருகிறார். இவர் மாணவிகளிடம் தவறாக நடந்து வருவதாகவும் பாலியல் தொல்லை அளிப்பதாகவும் மாணவிகள் தங்கள் பெற்றோரிடத்தில் புகார் அளித்தனர். அதனை பள்ளி நிர்வாகத்திற்கும் தெரிவித்தனர்.

பின்னர்வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திலும் பெற்றோர் புகார் அளித்தனர். அதன் பேரில் கடந்த 8ம் தேதி முதல் ரகசிய விசாரணை மேற்கொண்ட அலுவலர் நிஷாந்தினி, வெங்கடேசன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதை உறுதிசெய்தார். இதனையடுத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவத்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும்பெற்றோர்கள்அவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி