ஆப்நகரம்

கல்லூரி ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்தா? -அமைச்சர் சொல்வது இதுதான்!!

பொறியியல் கல்லூரி, கலை -அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 12 Jun 2020, 5:12 pm
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஜூன் 15 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன்பு அதிரடியாக அறிவித்தார்.
Samayam Tamil minister kpa


இதைத்தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ள பொறியியல், கலை -அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக, சமூக வலைதளங்களில் சில தினங்களாக தகவல் பரவி வருகிறது.

இதுதொடர்பாக, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தியாளர்களிடம் இன்று கூறியது:

10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் கேட்கும் தனியார் பள்ளிகள்?

பொறியியல் மற்றும் கலை -அறிவியல் கல்லூரி மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள், அவர்களின் பட்ட மேற்படிப்பிலும், அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அவர்களை பணியில் தேர்ந்தெடுக்கும்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே, இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான ஆண்டு பருவத் தேர்வுகளை( செமஸ்டர்) ரத்து செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

அதேசமயம், சென்னையில் தற்போது கொரோனா உச்சத்தில் உள்ளதாலும், பெரும்பாலான கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதாலும், தற்போதைக்கு தேர்வு நடத்தவும வாய்ப்பில்லை. இந்த விஷயத்தில் முதல்வருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி: பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!!

இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு 2019- 20 ஆம் ஆண்டுக்கான ஆண்டு பருவத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றிருக்க வேண்டும். பொதுமுடக்கம் காரணமாக இந்த தேர்வுகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகதத்தின் கீழும், கலை -அறிவியல் கல்லூரிகள் சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் கீழும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி