ஆப்நகரம்

ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையினால் அழித்ததால் பரபரப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையை கொண்டு பூசி அழிப்பு!

Samayam Tamil 8 Jun 2019, 1:01 pm
திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையை கொண்டு பூசி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையினால் அழித்ததால் பரபரப்பு!
ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையினால் அழித்ததால் பரபரப்பு!


திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு நிறுவனமான பிஎச்இஎல், துப்பாக்கி தொழிற்சாலை, விமான நிலையம், ரயில் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் என பல இடங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்புறம் உள்ள பெயர் பலகை, தலைமை தபால் நிலையம் முன்னுள்ள பெயர் பலகை மற்றும் கண்டோன்மென்ட் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மட்டும் ஆளில்லா நேரம் பார்த்து மர்ம நபர்கள் கருப்பு மையை கொண்டு பூசி அளித்துள்ளனர்.

தபால் நிலையம் முன்னுள்ள பெயர் பலகை


தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகளில் கருப்பு மை பூசி அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்து யார் அழித்தார்கள் என்று விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி