ஆப்நகரம்

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டம்: இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்றனர்

Samayam Tamil 2 Feb 2020, 4:02 pm
விருதுநகர்: குடியிரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு பள்ளி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டதை கண்டித்து இந்து அமைப்பினர் ஆப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்


குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகளை இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தலைநகர் டெல்லியில் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுதவிர, தமிழகம், கர்நாடகம் என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் அடுத்த துப்பாக்கிச் சூடு, இந்த முறை “இந்துக்கள்தான் ஆளவேண்டும்” என...

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு உதவி பெரும் பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஊர்வலம் நடந்த இடத்துக்கு சென்ற இந்து அமைப்பினர், குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு பள்ளி மாணவர்கள் அழைத்துச்சென்ற பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி