ஆப்நகரம்

நாய்களுக்கு கல்யாணம் முடிச்சு வைச்ச இந்து அமைப்பினர்!

காதலர் தினத்தை கண்டித்து கோவையில் ஆண் நாய்க்கும், பெண் நாய்க்கும் தாலி காட்டி திருமணம் நடத்தி வைக்கும் நூதன முயற்சியில் பாரத் சேனா அமைப்பினர் ஈடுபட்டனர்

Samayam Tamil 13 Feb 2020, 4:03 pm
கோவை: காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதன முயற்சியில் இந்து அமைப்பினர் ஈடுபட்டனர்.
Samayam Tamil நாய்களுக்கு திருமணம்
நாய்களுக்கு திருமணம்


உலகம் முழுவதிலும் ரோஸ் டே, பிராமிஸ் டே என கடந்த ஒருவார காலமாக காதலர் தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினத்தின் இறுதி நாளை (பிப்ரவரி 14ஆம் தேதி) உற்சாகமாக கொண்டாட உலக காதலர்கள் தயாரகி வருகின்றனர்.

ஆனால், இந்தியாவில் மட்டும்தான் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் நடத்தும் நூதன முயற்சியில் இந்து அமைப்பினர் ஈடுபட்டனர்.

விண்ணிலிருந்து வந்த பயங்கர சத்தம்...! உலகம் அழிவதற்கான அறிகுறியா? ஏலியன்களின் சித்து விளையாட்டா? பதற வைக்கும் பரபரப்பு சம்பவம்

கோவை பாப்பநாயக்கன்பாளையம் சிக்னல் அருகே ஜெர்மன் ஷெப்பர்டு ரக ஆண் நாய்க்கும், மற்றொரு ரக பெண் நாய்க்கும் தாலி காட்டி திருமணம் நடத்த முயற்சி செய்தனர். இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு அது சரிப்படாது என மழுப்பலாக பதிலளித்தனர்.


இதனையடுத்து பத்திரிகையாளர்களிடம் பாரத் சேனாவின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் ருத்ரமுத்து பேசுகையில், காதலர் தினம் என்ற பெயரில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும், பொது இடங்களில் அநாகரீகமாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், கடைசி வரைக்கும் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் தாலியை கையிலேயே அவர்கள் பிடித்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி