ஆப்நகரம்

Tirupur: தீப்பற்றி எரிந்தது இந்து முன்னணி பிரமுகரின் கார்... தீ வைத்தது யார்?

விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்ததால் அருகிலிருக்கும் இடங்களுக்குப் பரவாமல் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

Samayam Tamil 12 Feb 2020, 11:10 am
திருப்பூரில் இந்து முன்னனி நிர்வாகியின் கார் திடிரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil image is for representational purpose


திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் இந்து முன்னனியின் கோட்டச் செயலாளராக இருந்து வருகிறார் . எப்போதும் போல நேற்று இரவு காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து உடனடியாகத் தீயணைப்பு துறையினர் வந்தனர். விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்ததால் அருகிலிருக்கும் இடங்களுக்குப் பரவாமல் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் கைக்கூலி திமுக: இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்...

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் எரிந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் எப்படி எரிந்தது? வேறு யாரேனும் தீ பற்ற வைத்தனரா ? என்ற கோணத்தில், திருப்பூர் வடக்கு மாவட்டக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி