ஆப்நகரம்

லயோலா கல்லூரி கண்காட்சி குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி

சென்னை லயோலா கல்லூரி கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவை நடைபெறுகின்றது. ஒவிய கண்காட்சியில் பாரத மாதாவையும்,ஆஞ்ச நேயரையும், திரிசூலத்தையும் இழிவு படுத்தும் விதமாகவும், இந்து சமய வெறுப்பு உணர்வை தூண்டும் வித்த்தில் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 22 Jan 2019, 5:57 pm
சென்னை லயோலா கல்லூரி கருத்தரங்கம், கண்காட்சி ஆகியவை நடைபெறுகின்றது. ஒவிய கண்காட்சியில் பாரத மாதாவையும்,ஆஞ்ச நேயரையும், திரிசூலத்தையும் இழிவு படுத்தும் விதமாகவும், இந்து சமய வெறுப்பு உணர்வை தூண்டும் வித்த்தில் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன

மத்திய,மாநில அரசுகளை அவதூறு செய்யும் விதமாக இந்த கல்லூரியில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அரசு உதவியில் இந்த கல்லூரி நடைபெறுகின்றது. இந்து சமயம் புண்படுத்தும் வித்த்தில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இடஒதுக்கீட்டை கிறிஸ்தவ நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. லயோலா கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும். அந்த கல்லூரியை நாட்டுடமையாக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.

வரும் 3 ம் தேதி லயாலோ கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் சென்னையில் நடத்தப்படும் சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு உடன்பாடா என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும். கலவரங்களில் யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

இந்துமுன்னணி சசிக்குமார் கொலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோவை மக்கள் மேடை அமைப்பின் கோரிக்கையை ஏற்கின்றோம். யார் அழைத்த நிகழ்ச்சியில் கலவரம் ஏற்பட்டதோ அவர்கள் வன்முறைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்

அடுத்த செய்தி