ஆப்நகரம்

ஹெச்ஐவி ரத்தம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, வேலை வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு சொந்த வீடு, அரசு வேலை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 26 Mar 2019, 12:46 am
ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு சொந்த வீடு, அரசு வேலை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்று உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil madurai court.


மதுரையை சேர்ந்த அப்பாசாமி மற்றும் முத்துக்குமார் ஆகியோர்," தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

எய்ட்ஸ் தொற்று கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டதால்பாதிக்கப்பட்ட விருதுநகர் பெண்ணிற்கு முறையான சிகிச்சையும் உரிய இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும். ரத்த மாற்று சிகிச்சை மூலமாக ஹெச்ஐவி பரவுவதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவும், ரத்த மாற்று சிகிச்சையை பாதுகாப்பானதாக மேற்கொள்ள தேவையான உபகரணங்களை அனைத்து அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தவும், மக்களின் நலன் கருதி தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பானதாக பெற முறையான விதிகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்" என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.கந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண், நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜரானார். அவரிடம் தனியே விசாரணை நடத்திய நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அவரது மூத்த குழந்தையை பார்க்க பாதிக்கப்பட்ட பெண்ணை அனுமதிக்கவில்லை என்பதும் இதனால் அவர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதும் தெரிய வருகிறது.

ஆகவே, அவரது கணவருக்கு கவுன்சிலிங் வழங்குவதும் அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சொந்தமாக வீடு அரசு வேலை வழங்க வேண்டும். அவருக்கு இழப்பீடாக வழங்கும் தொகையை டெபாசிட் செய்து அதற்கான வட்டி பணத்தை எடுத்து பயன்படுத்தும் வகையில் செய்தல் வேண்டும்.

தொடர்ச்சியாக அவருக்கான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசுப் பணியை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் அவரது மூத்த குழந்தையை பார்க்காமல் மன அழுத்தத்தில் இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது மூத்த குழந்தை மார்ச் 27 நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி